இந்திய யூனியன் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு பாராட்டு விழா அய்யம்பேட்டை அஞ்சுமன் திருமண மண்டபத்தில் இன்று (07-07-2024) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மௌலானா மௌலவி முஹம்மது ஷாகிர் ஜைனி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாவட்ட இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, இணை பொருளாளர் ஜுல்பிகார் அகமது, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் நூர் முகம்மது, முகம்மது சித்திக் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
அஞ்சுமன் அறிவகம் ஜபருல்லாஹ், வாலன் அக்பர், சுலைமான் பாட்சா, முகம்மது அலி, அப்துல் மாலிக், ஜெய்லான் பாட்சா, இல்யாஸ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர்.
மாவட்ட செயலாளர் கமாலுதீன் ஃபைஜி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான் தொடக்க உரை நிகழ்த்தினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவருமான மாண்புமிகு அப்துல் ரஹ்மான் அவர்கள், மாநில துணைச் செயலாளர் திருச்சி பாரூக், மாணவரணி தேசிய துணை தலைவர் புளியங்குடி அல் அமீன், தென்காசி மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் லோகநாதன், திமுக நகர செயலாளர் துளசி அய்யா, பாபநாசம் வட்டார சுன்னத் ஜமாஅத் தலைவர் யூசுப் அலி, ஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா ஆகியோர் ஏற்புரை ஆற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பு பேருரை ஆற்றினார்கள்.
அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பிரைமரி தலைவர் பொதக்குடி பைசல் நன்றியுரை ஆற்றினார். இறுதியாக முஹம்மது இப்ராஹிம் நூரி ஹஜ்ரத் துஆ ஓதினார்கள். முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர எல்லையில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுப்போடு வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அய்யம்பேட்டை – சக்கராப்பள்ளி பிரைமரி உள்ளிட்ட பல்வேறு பிரைமரி, மாவட்ட மற்றும் அணிகளின் நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து இருந்தனர்.
விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், ஏராளமான ஜமாஅத்தார்களும், உலமா பெருமக்களும், இந்தியா கூட்டணியின் நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.