சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி 05.07.2024 அன்று நடைபெற்றது. கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமீத் தாவூத், கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்வில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிறுவனரும் சட்டக்களம் பத்திரிக்கை ஆசிரியருமான முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கல்லூரிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி இலவசமாக வழங்கி பேசினார்.
கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கல்லூரி விதிமுறைகள் குறித்து பேசினார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேவிப்பட்டினம், விவேகானந்தா வித்யாலயா பள்ளி, முதல்வர், கல்வியலாளர் தீனதயாளன் உயர்கல்வி பயில்வதின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இறுதியாக ஆங்கிலத்துறை தலைவர் ஷர்மிளா பானு நன்றி கூறினார். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நசீர் கான், உஸ்மான் அலி, அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சீராஜுதீன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்வினை தமிழ்துறைத்தலைவர் அப்துல் ரஹீம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
வேலூர் வேலப்பாடியில் உள்ள அருள் மிகு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் 3வது சனிக்கிழமை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவரும் 47-வது...
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவ ராய மலையில் எழுந்தருள் உள்ள ஸ்ரீபிரசன்னவெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு விசேஷ...
திருப்பதி - திருமலையில் பிரமோற்சவம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று இரவு மலையப்ப சுவாமி பெரிய ஷேச வாகனத்தில் பெரிய மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு...
திருப்பதி - திருமலையில் பிரம்மோற்சவத்தை கொடியேற்றம் நடந்தது. ஆந்திர அரசின் சார்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு துணியை (அங்கவஸ்திரம்) தனது மனைவியுடன் தன் தலையில் சுமர்ந்து...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.