தமிழகம்

காட்பாடி சப்-ரிஜிஸ்தர் நித்தியானந்தம் வீட்டில் ரூ.14 லட்சம் ரொக்கம், 80 சவரன் நகை பறிமுதல் ! : வேலூர் விஜிலென்ஸ் அதிரடி !!

57views
வேலூர் மாவட்டம் காட்பாடியில் சப் – ரிஜிஸ்தர் ஆக பணிபுரிந்த நித்தியானந்தம் (பொ) பல்வேறு முறைகேடுகளில் ஈடுப்பட்டதன் காரணத்தினால் கடந்த புதன்கிழமை இரவு காட்பாடி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.14 லட்சத்தை வேலூர் விஜிலென்ஸ் போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து நேற்று மாலை திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள நித்தியானந்தம் வீட்டில் மண்ணில் புதைத்து வைத்தும், செடிகளின் மறைவிலும், வீட்டில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத ரூ.13 லட்சத்தது 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் 80 சவரன் நகைகள் மற்றும் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.   நித்தியானந்தம் திருப்பத்தூர், வேலூரில் சப் – ரிஜிஸ்தராக பணி புரிந்து பல்வேறு முறைக்கேடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நித்தியானந்தம் மற்றும் மனைவி தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் தெரியவந்துள்ளது.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!