தமிழகம்

காட்பாடியில் சாலையில் சென்று கொண்டிருந்த பைக் தீப்பிடித்து எறிந்தது ! உயிர் தப்பிய வாலிபர்!!

108views
வேலூர் அடுத்த காட்பாடி விருதம்பட்டு மாரியம்மன் கோயில் அருகில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வாலிபர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார், அப்போது அந்த பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி ஓடினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவோ ஏற்படவில்லை.  தகவலறிந்த விருதம்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்து சீரமைத்து விசாரணை செய்ததில் அந்த பைக் அணைக்கட்டு அடுத்த சின்ன ஊனை கிராமத்தை சேர்ந்த குருசோத்தமன் (32) என்பவற்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!