கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை , மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்களின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புக்கள் உள்ளது. அதில் கூடுதலாக, சிறப்பு சேர்க்கின்ற வகையில், தற்போது சிவகங்கையில், கடந்தாண்டு வெகு சிறப்பாகவும், பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் வகையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்;து, இவ்வாண்டும் 2-வது புத்தகத் திருவிழாவினை பபாசி நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக தொடங்கியுள்ளார்கள். அதனுடன் இலக்கியத் திருவிழாவும் அரசின் அறிவுரையின்படி இணைந்து நடத்தப்படுகிறது. புத்தகம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவும், அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கும் அடிப்படையாக அமைகிறது. கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் மற்றும் பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தங்களது கடைசி மூச்சின் போதும், புத்தக வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர் என்பதை நாம் அறிந்தவையே. ஒவ்வொவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. அதற்கு அடிப்படையாக புத்தகம் அமைகிறது. இதனை படைப்பாளிகள் படைக்கிறார்கள். அதனை பதிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். புத்தகம் வாசிப்பு என்பது எவ்வளவு அவசியம் என்பதை மாணவ, மாணவியர்கள் கருத்தில் கொண்டு, தங்களது திறன்களின் அடிப்படையில், சிந்தித்து நிறையப் புத்தகங்களை எழுதி தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி;களிலும் நூலகங்களை ஏற்படுத்தி, முன்னதாகவுள்ள அந்நூலகங்களை மேம்படுத்தி, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உபயோகம் உள்ள வகையில் பல்வேறு வகையான புத்தகங்களை இடம்பெறச் செய்துள்ளார்கள். கூடுதலாக நூலகங்கள் தேவைப்படும் பகுதிகளிலும் புதிதாக நூலகங்களை அமைத்திடவும் அறிவுறுத் தியுள்ளார்கள். சென்னையில், சர்வதேச அளவிலான புத்தகத் திருவிழாவினை நடத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு, மேலைநாடுகளுக்கு இணையாக 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த பன்னாட்டு பதிக்கப்பகங்களை அப்புத்தகத் திருவிழாவில் இடம்பெறச் செய்து கடந்த 15 தினங்களுக்கு முன்னதாக அப்புத்தகத் திருவிழாவினை சிறப்பாக நடத்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.