தமிழகம்

மதுரை அருகே 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அவதி

84views
மதுரை மாவட்டம் சோழவந்தான் முதல் பேரணை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்து விபத்துக்கள் நடப்பதாகவும் பெரிய அசம்பாவிதம் நடக்கும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்,
குறிப்பாக வண்ணாடிமங்கலம் அயப்பநாயக்கன்பட்டி குருவித்துறை ஆகிய இடங்களில் மோசமான சாலையால் விபத்துகள் அடிக்கடி நடப்பதாகவும் உடனடியாக சாலையை சீரமைத்துதர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இதனைத் தொடர்ந்து சாலையை சீரமைக்கா விட்டால் பஸ் மறியல்.செய்யப் போவதாக கடந்த சிலதினங்களுக்கு முன்பு இந்த பகுதி பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் மனு கொடுத்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலை அமைப்பதாக கூறி ஆங்காங்கே மணல் ஜல்லி கற்களை கொட்டி விட்டு சென்றனர்.
அப்போது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் இல்லையேல் ஜல்லி கற்களை கொட்ட விடமாட்டோம் என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் விரைவில் சாலை பணிகளை தொடங்குவதாக கிராம மக்களிடம் உறுதி அளித்து சென்ற நெடுஞ்சாலை துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகியும் சாலைப் பணிகளை தொடங்கவில்லை என்று தெரிகிறது.  இதனால் இன்று காலை அங்கு திரண்ட பொதுமக்கள் சாலையில் கொட்டியுள்ள மணல் ஜல்லி கற்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பாக அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அருகருகே அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும்.அரசு துவக்கப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் தினந்தோறும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் ஆகையால் எந்நேரமும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருப்பதால் உடனடியாக நெடுஞ்சாலை துறையினர் சாலையை சீரமைக்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி மறியல் செய்யப் போவதாக பொதுமக்கள் கூறினார்
இது குறித்து இந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது சோழவந்தான் முதல் பேரணை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது முக்கியமாக பிரசித்தி பெற்ற குரு பகவான் கோவில் அனைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆகிய வழிபாட்டு தலங்கள் இந்த பகுதியில் உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகிறது ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலை சீரமைக்கப்படவில்லை மேலும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மதுரை போன்ற நகரங்களுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் ஏற்கனவே சாலையை சீரமைத்ததாக கூறி படத்தை எடுத்து விட்டதாக தெரிகிறது இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை என்னிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நேரில் மனு கொடுத்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலையில் ஜல்லி மணல் கற்களை கொட்டி சென்ற நெடுஞ்சாலைத்துறைநர் அதன்பிறகு சாலை பணிகளை தொடங்கவில்லை இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது உடனடியாக சாலை பணிகளை தொடங்காவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி மறியல் செய்யப் போவதாக தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!