தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மாடுபிடி வீரர்கள் – இலவச மாடுபிடி பயிற்சி மையம் மூலம் பயிற்சி வழங்கும் மாடுபிடி வீரர்

180views
மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் மாடுபிடி வீரர்களும் மாடுபிடிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்காலிக வாடிவாசல் அமைப்பை உருவாக்கி அதில் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்துவிட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கி பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த முடக்காத்தான் மணி என்ற மாடுபிடி வீரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் என்ற உருவாக்கி அதன் மூலமாக கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!