தமிழகம்

உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் பத்திர பதிவு அலுவலகம் செல்லம்பட்டிக்கு இடம்மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து கிராமக்கள் சார்பில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்;டம் நடைபெற்றது.

283views
மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே உள்ளது சிந்துபட்டி ஊராட்சி.இக்கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் பத்திரப்பதிவு அலுவலகம் வங்கிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் பத்திரப்பதிவு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிந்துபட்டி கிராமத்தில் இயஙகி வருகின்றது.இங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை செல்லம்பட்டிக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.பத்திரப்பதிவு அலுவலகம் இடம் மாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு காலவிரயம் மற்றும் தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படும் எனக்கூறி கிராமமக்கள் அலுவலகம் இ;டமாற்றத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனாமுதற்கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியர்- உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர்-கோட்டாச்சியர் போன்றோரிடம் மனு அளிக்கும் போராட்;;டத்தில் ஈடுபட்டனர்.சிந்துபட்டி பத்திரப்பதிவு அலுவலகம் இடம் மாற்றத்தைக் கண்டித்து இன்று ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் படி சிந்துபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.சிந்துபட்டி கிராமமக்கள் கிராமமக்கள் மந்தை முன்பு அமர்ந்து ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கிராமமக்களின் போராட்டத்திற்கு அனைத்து கள்ளர் கூட்டமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!