தமிழகம்

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய கோரி எம்.கல்லுப்பட்டியில் கிராமமக்களில் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

297views
மதுரை மாவட்டம் எழுமலை அருகே சூலப்புரம் கிராமத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கிராம இளைஞர்களுக்கான கபடி போட்டி நடைபெற்ற போது எம்.எஸ்.புரம் கிராம இளைஞர்களுக்கும், மெய்யனுத்தம்பட்டி கிராம இளைஞர்களுக்கும் மோதல் ஏற்ப்பட்டது. இந்நிலையில் நேற்று எம்.கல்லுப்பட்டி காமராஜர் மகால் அருகில் நின்றிருந்த எம்.எஸ்.புரம் கிராமத்தைச் சேர்ந்த விஜயன், ராஜ்குமார் என்ற இரு இளைஞர்கள் மீது மெய்யனுத்தம்பட்டியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பாக எம்.கல்லுப்பட்டி போலிசார் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் உசிலம்பட்டி போலிசார் இவ்வழக்கு தொடர்பாக காரில் தப்ப முயன்ற சதீஷ்குமார்-ஆதீஷ்வரன்-முத்துகிருஷ்ணன்-செல்வம் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய உண்மைக்குற்றவாளிகளை இதுவரையில் கைது செய்யாமலிருப்பதைக் கண்டித்து எம்.கல்லுப்பட்டி கிராம மக்களில் ஒரு பிரிவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  சம்பவமறிந்த எம்.கல்லுப்பட்டி போலிசார் மறியலில் ஈடுபட்டவர்;களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!