தமிழகம்

மதுரை பசுமலை அருகே சாலையில் தோண்டப்பட்டு சரிவர மூடாத பள்ளத்தினால் கவிழ்ந்த லாரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் உடனடியாக சாலையை சரி செய்ய கோரி வேண்டுகோள்

81views
மதுரை பசுமலையில் குடிநீருக்காக பிரதான சாலையின் ஓரமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் என்பது நிறைவு பெற்று பல மாதங்கள் ஆன பிறகும் கூட புதிய சாலைகள் போடாமலும் அதே போல பள்ளங்களை சரிவர மூடாத காரணத்தினால் பல்வேறு விபத்துக்கள் தொடர்கதையாக இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதுவரை இந்த பள்ளத்தில் விழுந்து 4க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் இன்று கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கணநக லாரி இரும்புகளை ஏற்றி வந்தது சரிவராக மூடப்படாத பள்ளத்தில் லாரியின் டயர்கள் சிக்கி கொண்டடு ஒரு பக்கமாக லாரி சரிந்தது சுகாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் பொது மக்களுக்கு எந்தவித அசம்பாவிதம் இன்றியும் அவரும் எந்த வித காயம் இன்றி தப்பித்துள்ளார் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!