தமிழகம்

மதுரை ஆவினில் வேலை வாங்கி தருவதாக போலியாக பணி ஆணை வழங்கி 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது: மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

130views
மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த அருணாசலம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் ஆகிய இருவரும் வேலை தேடி வந்தனர்.  இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மற்றும் தனசேகரன், திருமங்கத்தை சேர்ந்த வைரவஜெயபாண்டி, சென்னையில் உள்ள மணி பாரதி ஆகியோர் சேர்ந்து மதுரை ஆவினில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  அதோடு அரசு வேலைக்கு இருவரும் தலா 6 லட்ச ரூபாய் வீதம் 12 லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
வேலை தேடி வந்த அருணாச்சலம், முத்துராஜ் இருவரையும் சென்னையில் உள்ள ஆவின் Tamilnadu Co-Operative milk producer’s Federation Limited அலுவலக வளாகத்திற்கு வரவழைத்த மணி பாரதி மற்றும் கூட்டாளிகள் அரசு வேலைக்கான ஆர்டர் விரைவில் வீட்டிற்கு வந்திடும் உடனே கேட்ட பணத்தை கொடுங்கள் எனக் கூறியுள்ளனர்.
தற்போது பணம் ரெடியாகவில்லை. இரண்டு நாளில் பணத்தை ரெடி பண்ணிட்டு போன் பண்ணுகிறோம் என கூறி மதுரை திரும்பிய இரண்டொடு நாளில் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஆனந்த கிருஷ்ணன், தனசேகரன் கூட்டாளிகளிடம் கொடுத்தனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி கும்பல் வேலையில் சேருவதற்கான பணி ஆணை வீட்டிற்கு வந்திடும் என கூறியுள்ளனர்.
வேலையில் சேருவதற்கான பணி ஆணை எதுவும் வராததால் அதிர்ச்சியடைந்த இருவரும் மீண்டும் மோசடி கும்பலிடம் இது குறித்து கேட்ட போது மீதி பணத்தை நீங்கள் கொடுக்காததால் தான் உங்களுக்கு வேலைக்கான பணி ஆணை இன்னும் வராமல் இருக்கிறது.
இந்த வேலைக்கு நிறைய பேர் போட்டி போடுவதால் சீக்கிரம் மீதி பணத்தை கொடுத்தால் உடனே வேலைக்கான பணி ஆணை வந்துவிடும் என கூறியுள்ளனர்.
உடனே மீதி பணத்தை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணத்தை ரெடி பண்ணி இருவரது வங்கி கணக்கில் செலுத்தினர்.  இருவரது வீட்டிற்கும் மதுரை ஆவினில் வேலையில் சேருவதற்கான பணி ஆணை வந்ததை எடுத்து கொண்டு  மதுரை ஆவினிற்கு பணியில் சேர வந்துள்ளனர்.
ஆவின் அதிகாரிகள் இருவரது பணியில் சேருவதற்கான ஆணையை வாங்கி பார்த்து இது போலியானது என கூறியதை கேட்டு அதிர்ச்சிடைந்தனர்.  உடனே மதுரை தல்லாக்குளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து மோசடியில் ஈடுபட்ட தனசேகரன் – ஆனந்த கிருஷ்ணன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  இவர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட ஜெயபாண்டி மற்றும் மணிபாரதியை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!