மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர் . பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார் .போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும் , சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.
268views
You Might Also Like
பெண்கள் வாழ்வு சிறக்கட்டும்!
முனைவர் என்.பத்ரி கல்கத்தா காங்கிரஸ் கூட்டத்திற்குப் பாரதியார் சென்றபோது, நிவேதிதா தேவி பாரதியாரிடம், "உன் மனைவியை நீ ஏன் அழைத்து வரவில்லை" என்று கேட்டாராம். அதற்குப் பாரதியார்,...
ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகை நடத்தி வரும் தமிழக மாணவர்
சிட்னி : ஆஸ்திரேலியாவில் அழகிய குரலில் கிராஅத் ஓதி தராவீஹ் தொழுகையை தமிழகத்தின் கீழக்கரையைச் சேர்ந்த மாணவர் முஹம்மது உவைஸ் அஹமது (வயது 15 ) நடத்தி...
ஷார்ஜாவில் ரத்ததான முகாம்
ஷார்ஜா : க்ரீன் குளோப் அமைப்பின் சார்பாக ஷார்ஜா மஜாஜ் பகுதியில் நூர் மஸ்ஜித் அருகில் ரத்ததான முகாம், க்ரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில்...
திருநள்ளாறில் ஸ்ரீசனிஸ்வர பகவானை தரிசித்த மத்திய அமைச்சர் முருகன்
புதுவை காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனிஸ்வர பகவானை, சனி பெயர்ச்சியை முன்னிட்டு மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக பிஜேபி தலைவர் நயினார்...
வேலூரில் இன்று 104 டிகிரி வெய்யில் வாட்டியது
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக வெய்யில் சதம் அடித்து வருகிறது. இன்று வெள்ளிக்கிழமை பகலில் 104 டிகிரி பாரன்ஹீட் வெய்யில் பதிவானது. கே.எம். வாரியார்...




