மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர் . பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார் .போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும் , சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.
328views
You Might Also Like
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....
வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
வேலூர் அரசு பொறியியல் கல்லூரில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கப்பட்டன. கல்லூரி முதல்வர் பி.பிரவீன்ராஜ் தலைமையில் குத்துவிளக்குகள் ஏற்றி துவக்கிவைக்கப்பட்டது. அருகில்...
வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி கிருத்திகை அலங்காரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ முருகன்....




