இலங்கையின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மீண்டும் மாற்றுத்திறனாளிகளை பேசு பொருளாக்கும் நோக்கோடு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா இவ்வருடம் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20,21 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட உள்ளது.
டேட்டா சரிட்டி ( DATA Charity ) , மட்டக்களப்பு மாற்றுத்திறனாளிகள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தில் இருந்து (திருகோணமலை ,மட்டக்களப்பு , அம்பாறை ) 1000 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு விழாவுக்கு பிரதான அனுசரணையை அபி டயமன்ட், ராஜ் கிளஸ்டர் மற்றும் லிங்க்ஸ் லீகல் ஆகிய நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.
மட்டக்களப்பில் இருந்து 26 மாற்றுதிறனாளிகள் அமைப்புகளும் , அம்பாறையில் இருந்து 08 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் , திருகோணமலையில் இருந்து 04 மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களும் இந்த விளையாட்டு விழாவில் கலந்து கொள்கின்றனர்.
போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத்தேவையாக உள்ள அனைத்து வசதிகளும் கொண்ட பராமரிப்பு நிலையம் உருவாக்க அனைவரும் இணைந்து உதவிடவேன்டும் என்ற பரப்புரையை இந்த ஆண்டு விளையாட்டு விழாவில் நாம் முன்வைக்கின்றோம்.
தமிழ் பரா விளையாட்டு விழாவானது 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் மிக பிரமாண்டமாக நடாத்தப்பட்டது .
அதன் தொடர்ச்சியாக 2020 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு இருந்தன கொவிட் பரவல் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டு ,இப்போது மீண்டும் மட்டக்களப்பில் நடை பெறுகின்றன .
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியின் முதல் அங்கமாக பார்வை இழந்தவர்களுக்கான சத்த பந்து கிரிக்கட் போட்டி இடம்பெறவுள்ளது . இந்த போட்டியில் மட்டக்களப்பை தளமாக கொண்டியங்கும் உதயம் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் ,யாழ் விழிப்புலனிழந்தோர் சங்கத்தினரும் பங்கு பற்றுகின்றனர் .
இந்த விளையாட்டு விழாவிற்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் , விளையாட்டு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் உதவி புரிகின்றன. அவர்களுக்கும் எமது DATA charity நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.