தமிழகம்

புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய சீமானுக்கு தடை!!

42views

சீமான் புதுச்சேரி மாநிலத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என மகிளா காங்கிரஸார் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர் .

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் , காங்கிரஸ் மற்றும் முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தை பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார் . சீமான் காங்கிரஸ் குறித்து பேசுவதை நிறுத்தவில்லை என்றால் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பொருந்தகை எச்சரிக்கை விடுத்திருந்தார் .

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே . எஸ் . அழகிரி சீமான் ஒரு சமூக விரோதி என்றும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்என கூறியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் பொது செயலாளர் சூசைராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் புதுச்சேரியில் கலவரத்தை தூண்டும் வகையிலும், நாட்டில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைதியாக உள்ள புதுச்சேரி மாநிலத்திற்குள் சீமான் நுழைந்தால் மிகப்பெரிய கலவரம் ஏற்படும். எனவே அமைதியை பாதுகாக்கும் வகையில் சீமானை புதுச்சேரிக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!