தமிழகம்

பாமக தனித்து நிற்பதால் கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து

43views

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து நிற்பதால் பாஜக, அதிமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை என முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு அமைச்சர்கள், கட்சி தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் அருகே முடிச்சூர் கிராம ஊராட்சியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து எச்.ராஜாநேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிபெறும். பிரிந்து நிற்பதால் பாமகவுக்குதான் நஷ்டம். 4 மாத திமுக ஆட்சியில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எங்கள் கூட்டணிக்கு பலமே மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதுதான். பிரதமர் மோடியால்தான் நாட்டில் பட்டினி சாவு இல்லாமல்உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் நம்பிக்கை துரோகம்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். திமுக கூட்டணியில் நம்பிக்கை துரோகம் செய்து வருகின்றனர் என்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!