தமிழகம்

11 பேருக்கு ‘நல்லாசிரியர்’ விருது!

47views

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில், மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.இதில், மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு தொகையை திருப்பூர் கலெக்டர் வினீத் வழங்கி கவுரவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நாகராஜன், மகேந்திரன், ராஜகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்:கோ.சுரேஷ், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி.ந.தெய்வீகன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, செலாம்பாளையம்.வே.சின்னராசு, பட்டதாரி ஆசிரியர், பாரதி நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தளி ரோடு.பா.சிவராஜன், தொழிற்கல்வி ஆசிரியர், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.மு.பழனிசாமி, தொழிற்கல்வி ஆசிரியர், புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம்.கு.கண்ணபிரான், இடைநிலை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ராகல்பாவி.செ.வசந்தி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பூளவாடி, உடுமலை.கி.சுதா, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கணபதிபாளையம்.மு.சாமுண்டீஸ்வரி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, காஞ்சிபுரம், திருப்பூர் தெற்கு.வி.கல்பனா, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கரையூர்.த.மணிகண்டன், முதல்வர், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கே.செட்டிபாளையம்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!