செய்திகள்விளையாட்டு

நெருக்கும் ஐபிஎல் போட்டிகள்.. துபாயில் தீவிர பயிற்சியில் தோனி, சிஎஸ்கே வீரர்கள்

41views

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில நாட்களாக துபாயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் தொடங்கி அக்டோபர் 15 வரையில் 2021 ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

அதற்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட அவர்கள் கடந்த சில நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி வலைப்பயிற்சியில் பந்தை பேட்டால் அடித்து பறக்கவிடும் வீடியோ ஒன்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

ரெய்னா, உத்தப்பா, தீபக் சஹார், ருதுராஜ் கெய்க்வாட் என சென்னை அணியின் வீரர்களும் தோனியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!