தமிழகம்

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு

49views

வேலூர் அருகே இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று அதிகாலை 4.47 மணியளவில் வேலூரை மையமாக கொண்டு பூமிக்கடியில் 25 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 4.4 ஆக பதிவான இந்த நில அதிர்வால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த வெள்ளியன்று மிஜோரத்தின் தென்வாலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதே நிலஅதிர்வு வடகிழக்கு மாநிலங்களிலும் பங்களாதேஷின் ஒரு சில நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!