சினிமா

விஜய் சேதுபதி மீது தாக்குதல் ஏன்? பரபரப்பு தகவல்

51views

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நேற்று தனது நண்பர் மற்றும் நடிகருமான மகா காந்தி என்பவருடன் விமானத்தில் பயணித்து பெங்களூரு வந்து கொண்டிருந்தார். அப்போது விமானத்தில் மகா காந்திக்கும்‌ அதே விமானத்தில் பயணித்த ஜான்சன் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு மகா காந்தி மற்றும் விஜய் சேதுபதி விமானத்திலிருந்து இறங்கி விமான நிலையத்தின் வெளியே வந்து கொண்டிருந்த போது அங்கு காத்திருந்த ஜான்சன், மகா காந்தி மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் அந்த தாக்குதல் விஜய் சேதுபதி மீது விழுந்தது.

இந்தத் தாக்குதல் நடந்த பிறகு உடனடியாக அங்கிருந்த சிஆர்பிஎஃப் அதிகாரிகள் விஜய் சேதுபதியையும், மகா காந்தியையும் தடுத்து நிறுத்த பசமாதானம் செய்து அனிப்பிவைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நேற்று இரவு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வடகிழக்கு காவல்துறை துணை ஆணையர் சிகே பாபா, விஜய் சேதுபதி மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!