ஸ்பெயினின் லா லிகா கோப்பை கால்பந்து போட்டியின் 36வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் பார்சிலோனா எப்சி-லெவான்டே யுடி அணிகள் மோதின. அதில் பார்சிலோனாவே ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் கோல் அடிக்கும் முயற்சியில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. அந்த முயற்சி இரு அணிகளுக்கும் சம வாய்ப்பை அளிக்க ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. டிரா ஆனாதால் ஒரே ஒரு புள்ளி கிடைக்கவே பார்சிலோனா 76 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. வெற்றி பெற்றிருந்தால் 78 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றிருக்கும்.
பார்சிலோனா இதுவரை 36 ஆட்டங்களில் ஆடியுள்ள நிலையில், 77 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கும் அத்லெடிகோ மாட்ரிட், 75புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் தலா 35 ஆட்டங்களில் மட்டும் விளையாடி உள்ளன. எனவே இந்த அணிகளின் வெற்றி தோல்விகளுடன், பார்சிலோனா எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெறும் வெற்றிதான் அதன் சாம்பியன் கனவை நனவாக்கும். அதனால் லெவான்டேவுக்கு எதிரான டிரா பார்சிலானாவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.
107views
You Might Also Like
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...
முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 28.08.2024 மற்றும் 29.08.2024 ஆகிய இரண்டு நாட்கள் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கால்பந்து போட்டி நடைபெற்றது....