கவிதை

மூலாதாரம்

208views
13.3.2022 அன்றைய “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் “மூலாதாரம்” என்ற தலைப்பில் ஆகச் சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்ட கவிதையை எழுதியவர் –வேணு.தேன்மொழி.
மூலாதாரம்
மனித
இயக்கத்தின்
மந்திரம்…
மகத்துவம்
கண்ட
தத்துவம்..
மாய
உலகின்
தனித்துவம்..
தனிமனித
ஒழுக்கமே
துறவரம்.
ஆன்மீகம்
என்ற
பிரணவம்…
அண்டங்கள்
யாவும்
ஔிமயம்…
ஓங்காரம்
என்ற
நாதம்…
நம்
உயிரில்
கலந்த
வேதம்…
வேண்டுதல்
யாவும்
யோகம்…
நம்
வாழ்க்கை
சக்கரத்தின்
ஆதாரம்..
முதலும்
முடிவும்
இறையே..
மனதை ஒரு
நிலைப்படுத்துதல்
முறையே..
முற்று
பெறா
வாழ்வின்
நிலையே..
நிம்மதி
ஒன்றே
சக்தியே..
சரீரம்
காண்பது
சுழற்சியே..
மனித
உணர்வின்
மூலாதாரத்தின்
முயற்சியே…
மனித
ஒழுக்கத்தின்
மறையே..
நிறைக் காணும்
இயற்கை நீதியின்
இயக்கமே..
  • வேணு.தேன்மொழி.

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!