முற்றிலும் பெண் நீதிபதிகள்; கேரள உயர் நீதிமன்றத்தில் புதுமை
57
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று, கேரள உயர் நீதிமன்றத்தில் முதன் முறையாக முற்றிலும் பெண் நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரித்தனர்.சர்வதேச மகளிர் தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று முற்றிலும் பெண் நீதிபதிகள் மட்டுமே உடைய அமர்வுகள் வழக்குகளை விசாரித்தன. கேரள உயர் நீதிமன்ற வரலாற்றில் இதுபோல் முற்றிலும் பெண் நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பது இதுவே முதன்முறை.நீதிபதிகள் அனு சிவராமன், வி.ஷிர்ஷி மற்றும் எம்.ஆர். அனிதா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்று பல வழக்குகளை விசாரித்தது.