தமிழகம்

மதுரை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை ஆய்வு

107views
மதுரை மாவட்டத்தில், பெய்து வரும் பலத்த மழையால் பல கன்மார்களுக்கு தொடர்ந்து நீர் வளர்த்து அதிகரித்துள்ளது. மதுரை அருகே உள்ள வண்டியூர் கண்மாய், கொடிக்குளம் கண்மாய், பரவை கண்மாய், திருமங்கலம் உறப்பனூர் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் வாய்க்காலில் மூலம் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால், வண்டியூர் கண்மாய் மதங்கள் திறக்கப்பட்டு நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் ஆய்வு செய்து தண்ணீரை பாதுகாக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
செய்தியாளர்: வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!