தமிழகம்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS) லோகோவில் தமிழ் மொழியில் பெயரை சேர்க்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு கடிதம்.

170views
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை (AIIMS) லோகோவில் தமிழ் மொழியில் பெயரை சேர்க்க வேண்டும். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் அவர்கள் மத்திய அமைச்சருக்கு கடிதம்.
இது குறித்து கடிதத்தில் கூறி இருப்பதாவது;
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, இந்த மாநிலத்தில் அமைக்கப்படுவதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.
இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு மற்றும் நிறுவனக் குழுவின் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றோர், ஏற்கெனவே இந்த மருத்துவமனையை உகந்த செயல்பாட்டுடன் விரைவில் தொடங்குவதை உறுதி செய்வதற்காக வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சமீபத்தில் சென்னையில் நடந்த மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு மற்றும் நிறுவனக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, ​​மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.  எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் தங்களின் அன்பான நடவடிக்கையை வேண்டுகிறேன்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!