இந்தியாசெய்திகள்

பொது சுகாதாரத்துக்கு ரூ.23,220 கோடி, விவசாயிகளுக்கு ரூ.15,000 கோடி! மத்திய அரசு அதிரடி!!

154views

பொது சுகாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ.23,220 கோடி ஒதுக்கீடு செய்யும் என்றும், விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.15,000 கோடி மானியம் வழங்கப்படும் எனவும் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறைகள் மீண்டெழுந்து வர வேண்டும் என்பதால் ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா காரணமாக பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ .50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது . சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க சுற்றுலா பயணிகளுக்கு சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது . அதன்படி , 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும். அவசர கால கடன் வசதியாக தொழில்துறையை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களில் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோரை கூடுதலாக பயணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!