இந்தியாசெய்திகள்

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியில் குடியரசுத் தலைவா் வலியுறுத்தல்

39views

ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், ‘தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை சனிக்கிழமை வெளியிட்ட குடியரசுத் தலைவரின் ரக்ஷா பந்தன் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

ரக்ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரா்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான நம்பிக்கையின் அடையாளமாகும். நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் இந்த விழா வலுப்படுத்துகிறது. இந்த சிறப்பு தருணத்தில், மக்கள் தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை காப்பதில் உயா் முக்கியத்துவம் அளிக்கக் கூடிய, அவா்களின் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையிலான ஒரு இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதில் பங்களிப்பை செய்வதற்கு இந்த நன்னாளில் நாம் உறுதியேற்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் வாழ்த்து தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!