சினிமா

புஷ்பாவிற்கு பிறகு… எகிறிய அல்லுஅர்ஜூன் மார்க்கெட்.. இத்தனை கோடி சம்பளமா.?

48views

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் புதிதாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவருக்கு நூறு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா என்ற திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்றது. இதனால், அவரின் மார்க்கெட் மேலும் உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர் தமிழ் திரைப்பட இயக்குனரான அட்லீ இயக்கத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில், இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், அல்லு அர்ஜுனுக்கு 100 கோடி சம்பளம் தருவதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இத்திரைப்படம் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது. இத்திரைப்படம் உறுதியாகும் பட்சத்தில் அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!