விளையாட்டு

புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது டெல்லி அணி

90views

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் அரை இறுதி போட்டியில்  பாட்னா பைரட்ஸ் உ.பி.யோத்தாவையும் , தபாங் டெல்லி, பெங்களூரு புல்சையும் வெளியேற்றி இறுதிப் போட்டியை எட்டின.

இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சமமாக மல்லுக்கட்ட போட்டி மிகுந்த பரபரப்பாக சென்றது.

ஒரு கட்டத்தில் போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் மட்டுமே இருக்க இரண்டு அணிகளும் 28-28 என்ற கணக்கில் சமநிலை வகித்தன. இறுதி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட டெல்லி அணி 37-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக நவீன் குமார் 12 புள்ளிகள் எடுத்து அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!