விளையாட்டு

புதிய சாதனை படைக்கவிருக்கும் ரோகித் சர்மா!

41views

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தனது 400வது சர்வதேச போட்டியில் விளையாடவுள்ளார்.

நாளை பெங்களூருவில் நடைபெறவிருக்கும் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ரோகித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் 400வது போட்டியில் விளையாடும் 9வது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இந்த புதிய சாதனையை படைக்கவுள்ளார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் 400 போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ் தோனி, ராகுல் டிராவிட், விராட் கோலி, முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே மற்றும் யுவராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், சர்வதேச டி20 போட்டிகளில் 4 சதம் அடித்த ஒரே இந்திய வீரர் உள்ளிட்ட சாதனைகளை ரோகித் சர்மா படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கு சரிபட்டுவரமாட்டார் என ஓரங்கட்டப்பட்ட ரோகித் சர்மா, சமீபகாலமாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கேப்டனாகவும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!