இந்தியா

பிளஸ் 2 வினாத்தாள் கசிந்தது எப்படி? மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது

189views

12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மாநில இடைநிலை கல்வி வாரியத்தின் சார்பில் 12ஆம் வகுப்பு ஆங்கில தேர்வு நேற்று நடைபெற்றது. ஆனால் பால்லியா மாவட்டத்தில் அந்த தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியானது. இந்த விவகாரம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வினாத்தாள் வெளியானதால் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு 24 மாவட்டங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆங்கில வினாத்தாள் வௌியான விவகாரம் தொடர்பாக பள்ளிகளுக்கான மாவட்ட ஆய்வாளர் பிரிஜேஷ்குமார் மிஸ்ரா உள்பட 17 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் பிரிஜேஷ்குமார் மிஸ்ரா பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!