இந்தியா

பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

46views

வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

பினாகா ஏவுகணை அமைப்பின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது . இவை 40 கிலோ மீட்டர் தூரம் முதல் வெவ்வெறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை .

மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ( டிஆர்டிஓ ) ஆய்வகங்களான , கனரக ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் , உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவை இணைந்து பினாகா ஏவுகணை அமைப்பை வடிவமைத்துள்ளன .

இதேபோன்று , உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதும் , ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடியதுமான சந்த் ஏவுகணையும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது . இந்த ஏவுகணை தொலைவில் இருந்து , பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகவும் செயல்படும் .

இதனை , பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ( டிஆர்டிஓ ) மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து பொக்ரானில் சோதனை செய்தன . அதிநவீன மில்லி மீட்டர் அலை ரேடார் தேடும் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை , 10 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் . இவ்விரு சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்திய குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!