உலகம்

நேபாளத்தில் போகாராவின் கிழக்கே 5.3 அளவிலான நிலநடுக்கம்

135views

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தின் போகாராவிலிருந்து கிழக்கே 35 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ் (USGS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்தின் அருகில் வசித்தவர்களுக்கு பூகம்பத்தின் தாக்கம் அதிகம் தெரிந்ததாகக் கூறப்படுகிறது.
காத்மாண்டுவிலிருந்து 113 கி.மீ வடமேற்கில் நேபாள நாட்டின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. “10 நிமிடங்களுக்கு முன்பு காத்மாண்டுவில் (Nepal) 113 NW ஐ பூகம்பம் (earthquake) தாக்கியது” என்று EMSC வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
உயிர் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை. பூகம்பத்தால் குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
“லாம்ஜங் மாவட்டத்தின் புல்பூலே (Bhulbhule of Lamjung District) என்ற இடத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது, அங்கு இது 5:42 NPT இல் நிகழ்ந்தது. 5.8 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது” என்று தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (National Earthquake Monitoring & Research Centre) தலைமை நில அதிர்வு நிபுணர் டாக்டர் லோக் பிஜய் ஆதிகாரி தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!