சினிமா

நெடுநாள் கண்ட கனவு படமாக்கப்பட்டுவிட்டது… ‘மின்மினி’ படம் குறித்து இயக்குனர் ஹலிதா ஷமீம்!

72views

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மின்மினி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி, ஏலேய் என விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களைக் கொடுத்து கவனம் பெற்றுள்ளார்.

தற்போது அவர் ‘மின்மினி’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஒரு படத்தின் கதைக்காக ஒரு இயக்குனரோ அல்லது நடிகரோ அதிகபட்சம் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் காத்திருப்பார்கள். ஆனால் ஹலிதா தனது படத்திற்காக 6 ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருந்துள்ளார்.

மின்மினி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 6 வருடங்களுக்கு முன்பு நடந்தது. கதையில் அந்த சிறுவர்கள் 6 வருடங்கள் கழித்து இருக்க வேண்டும் என்று ஹலிதா 6 வருடங்கள் காத்திருந்துள்ளார். அவரின் இந்த பொறுமை மற்றும் முயற்சி கண்டு அனைவரும் வியந்தனர்.

சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு தான் மின்மினி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு லடாக்கில் துவங்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் ஹலிதா ஷமீம் தெரிவித்துள்ளார். “மின்மினி படப்பிடிப்பு நிறைவடைந்தது. மின்மினி படப்பிடிப்பை முடிக்கும் போது என் மனம் மிகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.
என்னுள் அமைதியான சூரிய ஒளியை உணர முடிந்தது. நெடு நாள் கண்டதும்,நெடுந்தூரம் சுமந்ததுமான இக்கனவு படமாக்கப்பட்டுவிட்டது என்பதனை மன நிறைவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!!!” என்று தெரிவித்துள்ளார்.

எஸ்தர் அனில், கௌரவ், காளை, பிரவீன் – கிஷோர் ஆகியோர் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் இருவரும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!