உலகம்செய்திகள்

தைவானில் கொரோனா திடீர் அதிகரிப்பு.. மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு.!!

87views

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா துவக்கத்திலிருந்தே அதனை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் ஒன்றாக தைவான் இருந்தது.

இந்நிலையில், திடீரென பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் தைவானின் ஷிமேண்டிங் நகரத்தின் ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகள் வெறிச்சோடியது.

தைவானில் கடந்த 2 வாரமாக பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், கொரோனாவின் வீரியம் வெளிப்படும் என்ற அச்சத்தால் அரசு பொது மக்களுக்கு பல்வேறு தடைகளை விதித்துள்ளது. மேலும், பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், பொழுதுபோக்கு இடங்களையும் மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!