தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் கோரிக்கை

72views
தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் பல மாதங்களாக குடி தண்ணீர் தொட்டிபழுவடைந்துள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து போக உள்ளது.
பெரியகுளம் புதியபேருந்து நிலையத்தில்  குடிதண்ணீர் இல்லாததால் பயணிகள் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.    நகராட்சி ஆணையரிடம் பலமுறை கூறிய பொது மக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்கவில்லை.
பயணிகள்  அமர்வதற்கு இருக்கைகள் கிடையாது.  வயதானவர்கள் ,ஊனமுற்றவர்கள் கைக்குழந்தையுடன் பலமணிநேரமாக பேருந்து வருவதற்கு நின்று கொண்டே இருக்கிறார்கள்.  நகராட்சி நிர்வாகம் இதைக் கண்டு கொள்வதில்லை.
பொதுமக்கள், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.   உடனடியாக பெரியகுளம் நகராட்சி நிர்வாகமும்.மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து இதற்கொரு தீர்வினை கொடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!