தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் திரு K எத்திராஜ் மாநில இணை தலைவராகவும், திரு.M.அபூபக்கர் துணை தலைவராகவும், திருமதி S.கலைவாணி மகளிர் அணி தலைவியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தேனீ, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கும் சிறப்பு பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் களப்பணியார்களை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசனை
மேற்கொள்ளப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் திரு.நரேஷ்குமார் அவர்கள் தலைமையில் கூட்டம் சென்னை 100 அடி சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.