நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடல்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது புஷ்பவனம் பகுதி மீனவர்களான பன்னீர்செல்வம் , நாகமுத்து,ராஜேந்திரன் ஆகியோர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரப்பர் கட்டை,இரும்பு பைப்,அரிவாள் போன்ற ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதாகவும்,மேலும்,படகில் இருந்த 300 கிலோ மீன்பிடி வலைகள் உள்பட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களையும் எடுத்து சென்றதாகவும் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து,காயமடைந்த 3 பெரும் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
741views
You Might Also Like
வேலூர் ஆகாஷ் எஜிகேஷனல் சர்வீஸில் மூன்று மாணவர்கள் நீட் யுஜி-ல் சாதனை!!
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஆகாஷ் எஜுகேஷனல் அலுவலகம், வேலூரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்...
குடியாத்தம் அருகேபங்க் கடையில் சட்டவிரோத 48 கிலோ புகையிலை பறிமுதல் 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்பட்டி அடுத்த வளத்தூரில் பெட்டி கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 48 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மேல்பட்டி காவல்துறை கைப்பற்றி...
காட்பாடி நலச்சந்தையை துவக்கி வைத்த ஆட்சியர்
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நலச்சந்தையின் 37 -வது மாதந்திர சந்தையில் கீரை திருவிழாவை ஆட்சியர் சுப்புலெட்சுமி துவக்கிவைத்து பார்வையிட்டார்....
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சந்தனகாப்பு அலங்காரம்
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு சந்தனகாப்பு அலங்காரத்தில் இராம பக்தன், காலை,மாலையில் பக்தர்கள்தரிசனம் செய்தனர்,...
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது.
தொல்.திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை வணங்கி மகிழ்ந்து அவர்களின் வழிகாட்டுதலின்படி எதிர்வரும் சூன் 14 திருச்சியில். மதச்சார்பின்மை காப்போம். மாபெரும் மக்கள் எழுச்சிப்பேரணி வி.சி.க. கட்சி தலைவர்...