தமிழகம்

தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

46views

புதுச்சேரியில் கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார்.

கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள்

கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கைக எடுத்து வருகிறது. இதன் பயனாக

முதல் தவணை ஊசியை 7,70,000 பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4,48,000 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர்.

புதுச்சேரியில் 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நிலையில்விடுப்பட்டவர்கள் சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால்

கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு 54(1)விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.மீறி வெளியே நடமாடினால் தண்டிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்ட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு விடுத்துள்ள அறிவிப்பில்,கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது.மீறி வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குனர் ஸ்ரீராமலு எச்சரித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!