ஜெர்மனி பல்கலைக்கழக வகுப்பில் துப்பாக்கிச் சூடு
103
ஜெர்மனியின் புகழ்பெற்ற ஹைடல்பா்க் பல்கலைக்கழத்தில் திங்கள்கிழமை வகுப்பு நடைபெற்றபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 போ காயமடைந்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், வகுப்பறையில் துப்பாக்கியால் சுட்ட நபா் தப்பியோடினாா். பின்னா் அவா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டாா் என்று தெரிவித்தனா். மேலும், தாக்குதல் நடத்திய நபா் தனியாகத்தான் செயல்பட்டாா், அவருக்கு மத மற்றும் அரசியல் அமைப்புகளுடன் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை என்றனா்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபா் அந்தப் பல்கலைக்கழக மாணவா் என்று சில ஊடகங்கள் தெரிவித்தாலும் போலீஸாா் அவரது அடையாளத்தை வெளியிடவில்லை.