சினிமா

சென்னை திரும்பிய டி.ராஜேந்தர்..சிம்புவின் திருமணம் பற்றி பேச்சு

60views

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தன் அசாத்திய நடிப்பு திறனால் ரசிகர்களை கவர்ந்தார். பின்பு ஹீரோவாக பல வெற்றிப்படங்களை கொடுத்த சிம்பு இயக்குனர், பாடகர் என பன்முகத்திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார்.

இருப்பினும் அவரின் வெளிப்படையான பேச்சால் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் சிம்பு. மேலும் இடையில் சில ஆண்டுகள் சிம்பு தன் திரைவாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்துள்ளார். படங்கள் வெளியாகாமல், வெளியானாலும் வெற்றிபெறாமல், உடல் எடை கூடி பல பிரச்சனைகளை சந்தித்தார் சிம்பு.

இருப்பினும் அவரது ரசிகர்கள் அவருக்கு பக்கபலமாக இருந்தனர். இந்நிலையில் தன் உடல் எடையை எல்லாம் குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக தற்போது கலக்கி வருகின்றார். மாநாடு படத்தின் வெற்றி, டாக்டர் பட்டம், பிக் பாஸ் தொகுப்பாளர் என வெற்றிநடைபோட்டு வருகின்றார் சிம்பு.

இந்நிலையில் சிம்புவின் தந்தையும் பிரபல இயக்குனருமான டி.ராஜேந்தர் சமீபத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று தற்போது குணமடைந்து இன்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது சிம்புவின் திருமணம் பற்றி பேசிய டி.ராஜேந்தர், சிம்புவின் நல்ல மனசுக்கு நல்ல பெண்ணாக கிடைப்பார். மேலும் திருமணம் எல்லாம் கடவுள் தான் நினைக்கவேண்டும் என கூறியுள்ளார் டி.ராஜேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!