சினிமா

சின்னத்திரையில் பிரபல சீரியல் ஜோடிக்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

66views

கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவுக்கும்,திருமணம் சீரியல் நடிகர் தீபக்குமாருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.இவர்களின் ப்ரீ வெட்டிங்க் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர் செய்தி வாசிப்பாளர் அபி நவ்யா. தற்போது சன் டிவி கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் தீபக்குமாரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தங்களது காதல் குறித்து இன்ஸ்டாகிராமில் அபி நவ்யா பதிவிட்டிருந்தார்.அப்போது தான் இவர்களின் காதல் அனைவருக்கும் தெரியவந்தது.

பின்பு இருவரின் காதலுக்கும் குடும்பத்தார் ஓகே சொல்ல, கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இருவருக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த வீடியோவை அபிநவ்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் திருமண தேதியும் முடிவாகிவிட்டதால், விரைவில் டும் டும் என கூறி இருந்த அவருக்கு ரசிகர்கள் அப்போதே வாழ்த்துக்களை தெறிக்க விட்டிருந்தனர்.இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் இருவருக்கும் திருமணம் நடைப்பெறவுள்ளது. திருமண சடங்குகள் தற்போது தொடங்கி விட்டன. நலங்கு, ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

மாப்பிள்ளை தீபக் குமாருக்கு வீட்டில் நலங்கு வைக்கும் வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. தீபக்கைப் பொறுத்தவரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர், என்றென்றும் புன்னகை சீரியலில் லீட் ரோலில் நடித்தார். அவரின் நடிப்பு சின்னத்திரையில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!