செய்திகள்விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து… பெரு அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில்…

74views

47வது தென் அமெரிக்க கால்பந்து தொடரின் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பிரேசில் அணி பெரு அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராட வேண்டி இருந்தது.

இந்நிலையில் ஆட்டத்தின் 34 வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பிரபல வீரர் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். எதிரணியின் தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி தனது அணியைச் சேர்ந்த லூகாசிடம் பந்தை பாஸ் செய்ய அதனை அவர் கச்சிதமாக கோலாக மாற்றினார்.

அதன்பின் ஆட்டத்தின் இறுதி நேரம் வரை பெரு அணியினர் கோல் போட எடுத்த முயற்சிகளை சிறப்பான தடுப்பாட்டத்தினால் பிரேசில் அணியினர் தடுத்தனர். இதனால் ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்நிலையில் நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் அர்ஜெண்டினா அணி கொலம்பியாவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி வரும் 11ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியுடன் மோதவுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!