செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் ரத்து இல்லை: நாளை டோக்கியோவில் திருவிழாக்கோலம்!

49views

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் வீரர்கள் வீராங்கனைகள் உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது

ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து இல்லை என்றும் நாளை திட்டமிட்டபடி ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த தொடக்க விழாவில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் குவிந்துள்ளதால் டோக்கியோ நகரம் தற்போது விழாக்கோலமாக காட்சி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!