விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா – பெங்களூரு ஆட்டம் ‘டிரா’

83views

11 அணிகள் கலந்து கொண்டுள்ள 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

இந்த கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகளுக்கு இடையிலான பரபரப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 84-வது நிமிடத்தில் கோல் அடித்த பெங்களூரு வீரர் ஆஷிக் குருணியன், 88-வது நிமிடத்தில் அவரே சுயகோல் போட்டு தங்கள் அணிக்குரிய வாய்ப்பை பறித்து விட்டார்.

இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை சந்திக்கிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!