தமிழகம்

எஸ்.பி.வேலுமணி வீட்டில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி கண்டுபிடிப்பு!

50views

எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி நகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது .

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் . பி . வேலுமணி 2016 முதல் 2021 காலகட்டத்தில் ரூ .58.23 கோடி ( அதாவது வருமானத்தை விட 3,928% அதிகமாக ) சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ் . பி . வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் சோதனை நடத்தினர் . இந்தச் சோதனையில் ரொக்கப் பணம் , முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன .

இந்நிலையில் எஸ் . பி . வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர் . கோவையில் 41 இடங்கள் சென்னையில் 8 இடங்கள் , சேலத்தில் 4 இடங்கள் என எஸ் . பி . வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் சோதனை நடந்தது .

லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் , 11.153 கிலோ தங்க நகைகள் , 118 கிலோ வெள்ளி நகைகள் , கணக்கில் வராத பணம் ரூ .84,00,000 ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

மேலும் , ரூ .34,00,000 அளவுக்கு எஸ் . பி . வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது .

பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள் , மடிக்கணினி , கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்குத் தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது .

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!