உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பரபரப்பு.! மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்கள்.!!
இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் முழுவதும் மழையின் காரணமாக ரத்தான நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சை தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 146 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. மூன்றாவது நாள் இந்திய அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அதன்பிறகு ஆடிய நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆனது.
அதன் பிறகு, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 5-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், நியூசிலாந்து வீரர்களை இனரீதியாக இரண்டு பேர் விமர்சித்து உள்ளனர். அவர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.