இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள,உலகக் கோப்பை டி20 போட்டி நடத்துவதைப் பற்றி பிசிசிஐ ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
2021ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி கடந்த மாதம் தொடங்கி, நடைபெற்று வந்த நிலையில் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டு உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெற உள்ளது. போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஒருவேளை இந்தியாவில் உலக கோப்பை டி20 போட்டி நடத்த முடியவில்லை என்றால் , இந்தப் போட்டியை வெளிநாடுகளில் நடத்தப்படலாம். போட்டி தொடங்குவதற்கு இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் தற்போதைக்கு எந்த ஒரு முடிவும் எடுக்கப்போவதில்லை. இந்நிலையில் பிசிசிஐ-யின் பொதுக்கூட்டமானது , வருகிற 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்துவது பற்றி ,முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
269views
You Might Also Like
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான “Chennai District Masters Athletic Championship 2025” தடகள போட்டி
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி...
மாநில அளவிலான கைப்பந்து போட்டி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முன்னாள் மாணவர் கோப்பைக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி 27.01.25 மற்றும் 28.01.25 ஆகிய இரு தினங்கள்...
காட்பாடியில் 50 -வது ஜூனியர் கபடி போட்டிகள்
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள அரசு உள்விளையாட்டு மைதானத்தில் 50 -வது ஜூனியர் கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார். அருகில்...
காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் வேலூர் குடியாத்தம் வீரருக்கு 4 தங்கப் பதக்கம் !!
தென்னாப்ரிக்கா சன்சிட்டி நகரில் நடந்த காமன்வெல்த் ஜூனியர் வலுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் ஜெயமாருதி...
விளையாட்டு போட்டிகளில் வெற்றி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...




