உக்ரைனில் ரத்த ஆறு பாய்கிறது- போப் பிரான்ஸிஸ்
122
உக்ரைனில் ரத்த ஆறு பாய்கிறது என போப் பிரான்ஸிஸ் கருத்து தெரிவித்துள்ளார். போப் பிரான்ஸ் உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்கம் காரணமாக ரத்தமும், கண்ணீரும் கலந்து ஓடுவதாக கூறியுள்ளார். உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு அண்டை நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உரிய பாதுகாப்பு, உணவு இருப்பிடம் வழங்க அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டில் நடந்து வருவது ரஷ்யாவின் ராணுவ அடக்குமுறையின் மட்டுமல்ல இது ஒரு கொலை பேரழிவு மற்றும் மர்மம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.