உலகம்உலகம்செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 9 நாட்டு பயணிகள் வர தடை.. அதிரடி அறிவிப்பு.!!!

61views

இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் நேரடியாக சவுதி அரேபியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூன்றாவதாக ஒரு நாட்டில் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு அந்த நாட்டின் வழியாக வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அப்படி சவுதி அரேபியாவுக்கு வருபவர்களும், தடை விதிக்கப்பட்டுள்ள 9 நாடுகளில் 14 நாட்களுக்குள் பயணம் செய்திருக்க கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து நேரடியாக சவுதி அரேபியா வர தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா, யுஏஇ உள்ளிட்ட 11 நாடுகள் மீதான பயண தடை நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் ஆக இருந்தால், சவுதி அரேபியா வந்தவுடன் 7 நாட்கள் ஹோட்டல்களில் குவாரண்டைனில் இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!