இந்தியா

இந்தியாவில் கொரோனா மரணங்கள் கிடுகிடு அதிகரிப்பு- ஒரே நாளில் 1,173 பேர் உயிரிழப்பு

37views

இந்தியாவில் திடீரென கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன. நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று முன்தினம் 895 பேர் கொரோனாவால் மரணம் அடைந்திருந்தனர்.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 கோடியை நெருங்குகிறது. உலக நாடுகளில் நேற்று மட்டும் 17,67,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,79,03,625 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் 1,71,905; ஜெர்மனியில் 1,38,867; அமெரிக்காவில் 1,35,541 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனாவால் 57,67,966 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் 31,73,76,080. உலக நாடுகளில் இந்தியாவில்தான் ஒரு நாள் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவாகி உள்ளது.

இந்தியாவில் நேற்று மட்டும் 1,173 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நேற்று முன்தினம் 895 பேர் கொரோனாவால் மரணமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!